திருச்சியில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி!
திருச்சி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காயம் அடைந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Recommended Video
திருச்சி: திருச்சி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காயம் அடைந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருச்சி அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் - புவனிகா தம்பதியினர். இருவரும் தங்களது காரில், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது டயர் பஞ்சர் ஆனது. இதில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் காயமடைந்தனர். உடனடியாக, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தலைகுப்புற கிடந்த காரை, பொதுமக்கள் உதவியுடன் மீட்டு காவல்நிலையம் எடுத்துச் சென்றனர். இதனிடையே, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.