திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம்ஹூம்.. வரமாட்டேன்.. சுட்டே கொன்னுடுவாங்க.. அடம்பிடித்த கைதி.. கண்ணாடி துண்டால் கிழித்து அட்டகாசம்

சிறையில் இருந்து கோர்ட்டுக்கு வர மறுத்துள்ளார் ஒரு கைதி

Google Oneindia Tamil News

Recommended Video

    கைதி.. கண்ணாடி துண்டால் கிழித்து அட்டகாசம்

    திருச்சி: "ம்ஹூம்.. கோர்ட்டுக்கு வர மாட்டேன்.. என்னை சுட்டு கொன்னுடுவாங்க.. " என்று கைதி ஒருவர் ஜெயிலில் அடம் பிடித்துள்ளார்.. மேலும், கண்ணாடி துண்டால் தனக்கு தானே உடம்பெல்லாம் கிழித்து கொண்டு.. அட்டகாசம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை கைதிகள் அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்துவது வழக்கம்.

     A Prisoner refusing to go to trichy court

    இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் என்பவர் திருச்சி சிறையில் உள்ளார். இவர் சங்கிலி வழக்கில் கைதானவர்.. இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முயன்றனர்.

    அப்போது அவர், "நான் வெளியே வரமாட்டேன்.. நான் வந்தால் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்னுடுவாங்க.. கோர்ட்டுக்கு வரமாட்டேன்.. முடியாது.." என்று திடீரென அடம் பிடித்தார். அப்போதும் போலீசார் அவரை அழைத்துசெல்ல முயன்றபோது, கீழே கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து தனக்கு தானே உடலில் கிழித்து கொண்டார். இதனால் உடம்பெங்கும் ரத்தம் கொட்டியது.

    புதர் மண்டிய பூங்காவில்.. காதலியை சீரழித்த காதலன்.. அடுத்தடுத்து 6 பேர்.. கோவையை அதிர வைத்த சம்பவம்புதர் மண்டிய பூங்காவில்.. காதலியை சீரழித்த காதலன்.. அடுத்தடுத்து 6 பேர்.. கோவையை அதிர வைத்த சம்பவம்

    இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதற்கு பிறகு, ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

    வினோத் இவ்வளவு நடுங்குவதற்கு காரணம், வெறும் சங்கிலி பறிப்பு கேஸ் மட்டும் இல்லை.. திருச்சி, அரியலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் ஏகப்பட்ட கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். இதற்குதான் வினோத்துக்கு மரண பயம் பீறிட்டு வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

    English summary
    A Prisoner vinoth refusing to go to court from the trichy central jail for allegedly shooting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X