நரிக்குறவர் இன மக்களுக்கு சொந்த பணத்தில் அரிசி, பருப்பு வழங்கிய அதிமுக முன்னாள் எம்.பி. மருதராஜா
திருச்சி: துறையூர் அருகே வாழும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை முன்னாள் அதிமுக எம்பி மருதராஜா வழங்கினார்.
துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். அரசின் ஊரடங்கு உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த மருதராஜா தனது சொந்த நிதியில், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நரிக்குறவர் இன மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காலனிக்கு நேரில் சென்று வழங்கினார்.
அவருடன் துறையூர் ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவர் பொன்.காமராஜ், ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் சென்றனர். இதேபோல அதிமுகவினர் பலரும் நலத்திட்ட உதவிகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.