டைட்டானிக் கப்பல் போல் அதிமுக மூழ்கி வருகிறது... டிடிவி. தினகரன் சொல்கிறார்
திருச்சி: அதிமுக டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிவருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துரோக கட்சி என்றும் அதிலிருந்து விலகி வெகு தூரம் வந்து விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அது போல் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவும் மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சரும், தம்பிதுரையும் பாஜகவுக்கு எதிராக பேசுவது போல நாடகமாடுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய தினகரன், தேர்தல் வருகிறது என்றால் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்றார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங்களையும் அ.ம.மு.க. நிறைவேற்ற பாடுபடும். குறிப்பாக பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவோம், படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என்றார்.