இனி செப் 9 முதல் திருச்சி டூ மும்பை.. வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை தொடக்கம்
திருச்சி: திருச்சியிலிருந்து மும்பைக்கு இனி வாரத்தின் நான்கு நாள்களுக்கு விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதன்படி திருச்சியிலிருந்து மும்பைக்கு வாரத்துக்கு 4 முறை இன்டிகோ விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மும்பையிலிருந்து மாலை 3.35-க்குப் புறப்படும்விமானம் (6இ- 6265) திருச்சிக்கு மாலை 5.45 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல, திருச்சியிலிருந்து (6இ- 6267) மாலை 6.20-க்கு புறப்பட்டு மும்பைக்கு இரவு 8.15-க்கு சென்று சேரும். இந்த விமானச் சேவையானது திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தின் 4 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
நாமக்கல் திமுக... முன்னாள் மத்திய அமைச்சர் போடும் முட்டுக்கட்டை.. முட்டி மோதும் மாவட்டச் செயலாளர்.!
இந்த சேவை வரும் செப்.9 (புதன்கிழமை) முதல் தொடங்கவுள்ளது. திருச்சி உச்சிப்பிள்ளையாா் கோயில், மும்பை சித்திவிநாயகா் கோயில் ஆகிய விநாயகா் கோயில் மாநகரங்களை இணைப்பதற்காக இந்தச் சேவை தொடங்கவுள்ளது.