கவலைப்படாதீர்கள்... நான் இருக்கிறேன்... பார்வையற்ற மூதாட்டிக்கு தேடிச் சென்று உதவிய அன்பில் மகேஷ்
திருச்சி: திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ், பார்வையற்ற மூதாட்டி ஒருவருக்கு அவரது வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கியுள்ளார்.
திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் கொரோனா கால நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.. நிர்வாகிகள் எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதாலும், அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்கும் வழக்கம் உள்ளதாலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னால் பெரிய பட்டாளமே அணி வகுத்து நிற்கிறது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட எடத்தெருவில், லதா என்ற பார்வையற்ற மூதாட்டி கவனித்துக்கொள்ள ஆளின்றி வசித்து வருவதாகவும், அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் ஒன்றிணைவோம் வா செயல்திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட உதவி எண்ணுக்கு சிலர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இது அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்திற்கு சென்றவுடன் அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையுடன் அந்த மூதாட்டி இல்லத்திற்கு சென்ற இவர் அதனை வழங்கியதோடு நிதியுதவியும் அளித்தார்.
நண்பர்களுக்கு தகராறு.. இளைஞர் வெட்டிக் கொலை.. திருச்சியில் குடிபோதையில் வெறிச் செயல்
மேலும், கவலைப்படாதீர்கள் எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை அழைத்து தெரிவியுங்கள் என அன்பில் மகேஷ் அந்த மூதாட்டிக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார். இதனால் நெகிழ்ந்துபோன அந்த பார்வை திறனற்ற மூதாட்டி லதா, மனம் குளிர்ந்து அன்பில் மகேஷை வாழ்த்தி தனது உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தினார்.
இதனிடையே மூதாட்டி லதா இல்லம் அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலான தெரு என்பதால், அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வருகிறோம் என நிர்வாகிகள் கூறிய நிலையில் அதனை வேண்டாம் என தடுத்த அன்பில் மகேஷ், உதவிக் கேட்டு அழைத்த அந்த மூதாட்டி இல்லத்திற்கு தாமே சென்றது குறிப்பிடத்தக்கது.