திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Attack on Chief Minister Edappadi Palanisamys replacement vehicle while going to Trichy election campaign

நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

எடப்பாடியை நானோ.. திமுகவோ பொது எதிரியாக நினைக்கவில்லை.. ஏனெனில்... ஸ்டாலின் பொளேர்எடப்பாடியை நானோ.. திமுகவோ பொது எதிரியாக நினைக்கவில்லை.. ஏனெனில்... ஸ்டாலின் பொளேர்

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்தார்,
இதனை தொடர்ந்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மற்றும் திருவரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் திருச்சி வரகனேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார், அங்கு மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மாற்று வாகனத்தை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் மாற்று வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Attack on Chief Minister Edappadi Palanisamy's replacement vehicle while going to Trichy election campaign. Police are conducting a serious investigation into who damaged the Chief Minister's replacement vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X