நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து... கோவையில் பாஜக பிரமுகர் கைது.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருச்சி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவின் கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
உதகை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பாஜக பிரமுகர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை பாஜக சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் கல்யாணராமன் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.
திரிணாமுல் காங்கிரஸ் ஒரு ப்ரைவேட் கம்பெனி.. ஒரு மாசத்துல யாரும் அங்க இருக்க மாட்டாங்க.. பாஜக அட்டாக்
இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர், அதைத்தொடர்ந்து அங்கு வந்த மேலும் சில எஸ்டிபிஐ நிர்வாகிகள் பாஜக கூட்டத்தில் கற்களை எறிந்தனர். நிலைமை மோசமாவதைத் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களைக் கலைத்தனர். மேலும், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 30 பேரையும் கைது செய்தனர்.
மேலும், நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய கல்யாணராமனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினர்.
நேற்றிரவு. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.