பாராமரிப்பு பணி.. திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம்
திருச்சி: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது..
இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை ரயில்வே கோட்டப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண் 22627), திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி விரைவு ரயில்( வண்டி எண் 22628) போக்குவரத்தில், மார்ச் 3 ( செவ்வாய்க்கிழமை) முதல் 10- ஆம் தேதி வரை கோவில்பட்டி- திருவனந்தபுரம் இடையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நாள்களில் திருச்சியிலிருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும்.இதுபோல், தாம்பரம்-நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16191) சேவை, மார்ச் 9ம்-ஆம் தேதிவரை திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இதன்காரணமாக, தாம்பரத்திலிருந்து திண்டுக்கல் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.நாகா்கோவில்-தாம்பரம் (வண்டி எண் 16192) விரைவு ரயில், மார்ச் 3- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நாகா்கோவிலிலிருந்து திண்டுக்கல் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால், திண்டுக்கல்லிருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த இயக்கப்படும். பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னா், இந்த ரயில்களின் சேவை வழக்கம்போல இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.