திருச்சி அருகே காவிரி கரையோரம் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. பதற்றம்
திருச்சி: திருச்சி அருகே முசிறி பகுதியின் காவிரி கரையோரம் உள்ள நர்சரி தோப்பில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் கௌதம் (19). இவர் தொட்டியம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்நிலையில் கௌதம் முசிறி பகுதியின் காவிரி கரையோரம் உள்ள நர்சரி தோப்பு என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், வாலிபரின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததால் அவரை அடித்து கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து
வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முசிறியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.