வெற்றி பெற்றவர்களை குஷி படுத்தும் திமுக... ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா
திருச்சி: திமுக சார்பில் போட்டியிட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு பிரம்மாண்ட முறையில் செய்து வருகிறார்.
திமுக சார்பில் வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியான அதிமுக பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இணைந்த கரங்கள் என கூறியும் சமாதானம் ஆகாத ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இன்று கே எஸ் அழகிரி சந்திப்பு
பாராட்டு விழா
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் ஒன்றிய பெருந்தலைவர்களை கவுரவிக்கும் நோக்கில் அவர்களை அழைத்து பாராட்ட உள்ளார் மு.க.ஸ்டாலின். இதற்காக ஒரு பாராட்டு விழாவையே கூட நடத்தலாம் என அவர் முடிவெடுத்துள்ளார்.
பாராட்டு விழா
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் ஒன்றிய பெருந்தலைவர்களை கவுரவிக்கும் நோக்கில் அவர்களை அழைத்து பாராட்ட உள்ளார் மு.க.ஸ்டாலின். இதற்காக ஒரு பாராட்டு விழாவையே கூட நடத்தலாம் என அவர் முடிவெடுத்துள்ளார்.
அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேர் திமுகவிற்கு இருந்து அங்கு அதிமுகவை சேர்ந்தவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். காரணம் திமுகவில் உள்ள ஒருவர் சத்தமின்றி யாருக்கும் தெரியாத வகையில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டுள்ளார். இதுவரை அந்த உறுப்பினர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
தக்கவைக்க
இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை தொடர்ந்து தக்கவைக்க என்ன செய்யலாம் என திமுக தலைமை ஆலோசித்த நிலையில், முதற்கட்டமாக அவர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தலாம் என கே.என்.நேரு ஐடியா கொடுத்துள்ளார்.
ஏற்பாடுகள்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனையை கேட்ட ஸ்டாலின் அதற்கு ஓ.கே.சொல்லிவிட்டார். இதையடுத்து திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேரு தொடங்கிவிட்டார். இது தொடர்பாக திமுக தலைமையில் இருந்து தேதி குறிப்பிட்டு முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.