திருச்சியில்.. பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா.. 553 பேருக்கு சோதனை.. 15 நாள் கடையை மூட உத்தரவு!
திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். 15 நாட்கள் ஜவுளிக்கடையை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட
திருச்சி: திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். 15 நாட்கள் ஜவுளிக்கடையை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். இதில் 480 பேர் திருச்சி மாவட்டத்தில் வசிக்கின்றனர். துறையூர், மணச்சநல்லூர், முசிறி பகுதியிலும் வசிக்கின்றனர். அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஜவுளிக்கடை ஊழியர்கள் மூலம் யாருக்கும் தொற்று பரவக்கூடாது என்பதற்காக தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும்.
பலாத்காரம் இல்லையாம்.. 14 வயது சிறுமியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்.. யார்.. பரபரக்கும் திருச்சி!
ஜவுளிக்கடை கடையை 15 நாட்கள் மூடவும் உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜவுளிக்கடை உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.