'குடி'மக்களுக்கு ஒர் அறிவிப்பு.. 25ஆம் தேதி மாலை முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் லீவு!
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 48 ஆயிரத்து 891 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.மேலும் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்!
அதாவது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம்ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோல் டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல் சேலம் மாவட்டத்திலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 2 ஆம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.