நாங்க என்ன அவங்களை போல ஜடமா.. என்ன செய்வோம்னு தெரியும்.. அதிமுக எம்பிக்கள் மீது ஸ்டாலின் தாக்கு
திருச்சி: "நாங்க என்ன அவங்களை போல ஜடமா? நாடாளுமன்றம் கூடும்போது நாங்க என்ன செய்வோம்னு தெரியும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக எம்பிக்கள் குறித்து விமர்சித்து பேசினார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்:
மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நான் மட்டும் காரணம் அல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உழைப்பும்தான், இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
ஆனால் திமுகவின் வெற்றியை அதிமுக கொச்சைப்படுத்தி வருகிறது. அப்படியென்றால், மோடி வெற்றி பெற்றது பொய் பிரசாரமா? 37 எம்பிக்களை வைத்துகொண்டு திமுக என்ன செய்ய போகிறது? என்ன பயன் என்கிறார்கள்? அதிமுக எம்பிக்களைபோல் திமுக எம்பிக்கள் என்ன ஜடமா? அப்படி ஜடமாக இருக்க மாட்டார்கள். நாடாளுமன்றம் கூடும்போது என்ன செய்வோம் என்று தெரியும்.
செம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை
எட்டு வழிச்சாலையில் ஏன் எடப்பாடி இவ்வளவு அக்கறை காட்டுகிறார்? மேட்டூரில் 8 வருஷமா காவிரிநீர் உரிய காலத்தில் திறந்துவிடப்படவில்லையே.. இதைபற்றி அவருக்கு ஏதாவது கவலை உண்டா? காவிரி நீரை பற்றி கேட்டால் மேகதாது பற்றி பதில் சொல்கிறார்கள்.
அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீர் விஷயத்தில் காட்டவில்லை? ஏன் என்றால், இந்த திட்டம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்" என்றார்.