ஜோசியம் தெரியாது...தேர்தல் அறிவிப்பு தேதி மட்டும் கணிப்போம்... இது திமுக ஸ்டைல்
திருச்சி : பிப்ரவரி 28 ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறப்பு விழா முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. தி.மு.க விற்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை. பல தேர்தலை சந்தித்தவர்களுக்கும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது. எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம். கமல், தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது.
விவசாயிகள் சாலை மறியல்... நெடுஞ்சாலையான வயல்வெளிகள்... மக்கள் வேதனை
தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர். இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம். வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம்.
மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.
பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள். அது குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளது என்றார்.