திருச்சி தினத்தந்தி பிரிண்டிங் ஆபீசில் பயங்கர தீ விபத்து
திருச்சி: திருச்சி-தஞ்சை மெயின்ரோட்டில் துவாக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தினத்தந்தி பிரிண்டிங் வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பேப்பர் பண்டல்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
திருச்சி தினத்தந்தி நாளிதழுக்கு திருச்சி- தஞ்சை சாலையில் துவாக்குடி சிப்காட் பகுதியில் புதிய அச்சகம் திறக்கப்பட்டது.
இங்கு திருச்சி, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கான தினந்தந்தி நாளிதழ் அச்சிடப்பட்டு வந்தது. நவீன இயந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த அச்சகம் கடந்த 2 மாதத்திற்கு முன்தான் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான இயந்திரங்கள், பேப்பர் பண்டல்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
பிள்ளையாரை பிடிங்க... பொல்லாத தோஷமும் பறந்தோடி போகும்
துவாக்குடி, நவல்பட்டு, திருவெறும்பூர், உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திருச்சி, தஞ்சை பதிப்புக்கு உட்பட்ட வாசகர்களுக்கு வேறு பிராஞ்ச்சிலிருந்து நாளை காலை செய்தித்தாள் வினியோகிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.