பனி பெய்ய வேண்டிய நேரமிது.. திருச்சியில் இடை விடாமல் வெளுக்கும் மழை.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்
திருச்சி: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை தூறலுடன் தொடங்கிய மழை இரவு வரை பெய்த வண்ணம் இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை விவரம் (மி.மீ). கல்லக்குடி- 14.30, லால்குடி- 15.30, நந்தியாறு தலைப்பு- 21.60, புள்ளம்பாடி- 19, தேவிமங்கலம்- 13, சமயபுரம்- 14.20, சிறுகுடி- 6, வாத்தலை அணைக்கட்டு- 22, மணப்பாறை- 19.20, பொன்னனியாறு அணை- 16, கோவில்பட்டி- 13.20, மருங்காபுரி- 20.60, முசிறி-142, புலிவலம்- 12, நவலூா்குட்டப்பட்டு- 22, துவாக்குடி- 12.
குப்பம்பட்டி- 4, தென்பரநாடு- 15, துறையூா்- 4, பொன்மலை- 17.10, திருச்சி விமான நிலையம்- 24.40, திருச்சி ஜங்ஷன்- 20, திருச்சி நகரம்- 22.20 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 371.10 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 14.84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக சாலைகளில் குளம்போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்த கன மழை.. லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது
பல இடங்களில் சாலைகளில் ஈரம் காயாமல் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பனி பெய்யும் காலத்திலும் மழை பெய்து வருகிறது.