மணப்பாறையில் குவியல் குவியலாக குப்பையில் கிடந்த பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய தபால்கள்!
திருச்சி: மணப்பாறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாத தபால்கள் குவியல் குவியலாக குப்பையில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பையோடு குப்பையாக தபால்கள் குவியல் குவியலாக கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தபால் அனைத்தும் கல்வி நிலையங்கள், மாவட்ட ஆட்சியரகம் சார்ந்த தபால்களாகவே அங்க இருந்தன. அனைத்து தபால்களும் முத்திரைவில்லைகள் ஒட்டப்பட்டு, தபால் நிலைய நாட்குறிப்பு அச்சு பதிக்கப்பட்டும் இருந்து..
தேனி ஆவின் தலைவர் பதவி... ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்கு செக் வைத்த நீதிமன்றம்
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாத அரசுப் பணி மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த அவரச கால அரசு தபால்கள் உரியவர்களிடம் சென்றடையாமல் இவ்வாறு குப்பைகளில் வீசப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற மணப்பாறை போலீஸார் தபால்களை சேகரித்து அவை எங்கிருந்து வந்தது? யார் குப்பையில் போட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.