திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு வந்தவர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு வந்தவர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

High Way Road accident near Trichy kills 1: 16 injured

சென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி அந்த குடும்பம் வந்துள்ளது. சென்னை நோக்கி டெம்போ டிராவலரில் அவர்கள் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்களின் டிராவலர் திருச்சி அருகே வரும் போது விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த டிராவலர் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேகமாக டிராவலர் மோதியுள்ளது.

இதில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
High Way Road accident near Trichy kills 1: 16 injured have admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X