திருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது
திருச்சி: சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் திமுக வசமாகியுள்ளது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 14 ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழுவில் வெற்றி பெற்றவர்கள் திமுக மாவட்ட செயலாளர் கே என். நேருவை சந்தித்து, ஆசி பெற்றனர் .
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. இதன்படி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
1. புள்ளம்பாடி-ரஷ்யா
2.மண்ணச்சநல்லூர்- ஸ்ரீதர்
3.தொட்டியம்- புனிதாராணி
4.தா.பேட்டை- சர்மிளா
5.மணப்பாறை- அமிர்தவள்ளி
6. மருங்காபுரி-பழனியாண்டி
7.மணிகண்டம்- கமலம்
8. திருவரம்பூர்-சத்யா
9.உப்பிலியாபுரம்- ஹேமலதா
10.அந்தநல்லூர்- துரைராஜ்
11.முசிறி- மலர்
12.வையம்பட்டி- குணசீலன்
13.லால்குடி- ரவிசந்திரன்.
14 துறையூர்-சரண்யா.
மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவின் தர்மன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.