திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செவலை" நம்மை விட்டுப் போய்ருச்சு.. சோகத்தில் திருச்சி கிராமம்!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற செவலை உயிரிழந்துவிட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    'செவலை' நம்மை விட்டுப் போய்ருச்சு.. சோகத்தில் திருச்சி கிராமம்!

    திருச்சி: "விஷயம் தெரியுமா? நம்ம செவலை நம்மள எல்லாம் விட்டுட்டு போயிடுச்சு?" என்ற இந்த செய்திதான் திருச்சி மாவட்ட மக்களை கலங்க வைத்துள்ளது.

    யார் இந்த செவலை? ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டியை கலக்கிய ஜல்லிக்கட்டு காளைதான் செவலை. மணிகண்டம் கிராமத்தில் பழனியாண்டி வளர்த்த காளை!! செம முரட்டு பையன்!! போட்டின்னு வந்துட்டா ஜெயிச்சுட்டுதான் வீட்டுக்கு திரும்புவான். அவ்வளவு ரோஷக்காரன்!! மணிகண்டன் விவசாயியாக இருந்தாலும் செவலை கூட இருந்தாலே அவருக்கு ஒரு கெத்து தான்.

    Jallikattu bull Sevalai died due to health issue near Trichy

    இல்லைன்னா, மணிகண்டம் கிராமத்து பழனியாண்டியை இந்நேரம் பேசி கொண்டு இருப்போமா? அலங்காநல்லூர், தென்னலூர், பாலமேடு, சூரியூர் போன்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசை தட்டி சென்று வாங்கி வந்துவிடுவான் செவலை. என்னமோ திடீர்ன்னு செவலைக்கு உடம்பு சரியில்லாம போச்சு. எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடியாமல் செவலை உயிரிழந்துவிட்டது.

    செவலை உயிரிழந்த செய்தியறிந்து ஏராளமான ஜல்லிக்கட்டு வீரர்கள் கண்கலங்க போனார்கள். பல ஊர்களிலிருந்து செவலைக்கு அஞ்சலி செலுத்த கிளம்பி வந்தனர். அவர்களோடு பொதுமக்களும் சேர்ந்து செவலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விடைகொடுத்து அனுப்பி வைத்தனர்.

    English summary
    Jallikattu bull Sevalai died due to health issue near Trichy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X