திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்.. தான் தப்பிக்க பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்-வீடியோ

    திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் எஸ்ஐ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார் என பெண் போலீஸ் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்துக்கு புகார் கொடுத்த பெண்ணும் உடந்தை என்பது வீடியோவில் தெரியவந்தது.

    திருச்சி காவல் நிலையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் இரவு பணியின் போது அங்கு பணியாற்றும் பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் எழுந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். இந்த பெண் போலீஸின் புகாரால், தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிந்த எஸ்ஐ, "நான் அந்த பெண் போலீஸை பாலியல் தொந்தரவு செய்தேனா. நாங்கள் இருவரும் எப்போதும் இப்படிதானே இருப்போம்.

    மறுவிசாரணை

    மறுவிசாரணை

    அதென்ன என் மீது மட்டும் நடவடிக்கை என்று கேட்டு அந்த எஸ்ஐ, பெண் போலீஸ் மீதும் புகார் அளித்தார். இதனால் குழம்பிய எஸ்பி, ஜீயபுரம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சீண்டல்

    சீண்டல்

    மேலும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யுமாறு டிஎஸ்பிக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதை ஆய்வு செய்த போதுதான்அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. ஒரு நாள் இரவு பணியின் போது பெண் போலீஸின் அருகில் சென்ற பாலசுப்பிரமணியன் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்.

    போலீஸ் எஸ்ஐ

    போலீஸ் எஸ்ஐ

    இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை அவரிடம் சென்று அது போன்ற சீண்டல்களில் ஈடுபடுகிறார். இதற்கு அந்த பெண் போலீஸ் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை என்பதுதான் ஹைலைட். சுமார் 2 நிமிடங்கள் 50 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் எஸ்ஐக்கு பெண் போலீஸ் ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது.

    இரு குழந்தைகள்

    இரு குழந்தைகள்

    முன்னதாக இந்த லீலைகளின் போது காவல் நிலைய வளாகத்திற்கு பைக்கில் வந்த உளவுத்துறை போலீஸ்காரர் வரும் போது வண்டி வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி கொண்டனர். பின்னர் எஸ்ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸிடம் அந்த பெண் போலீஸ் பொய்யாக புகார் அளித்தது தெரியவந்தது. இந்த புகாரில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lady constable gives complaint against SI in Trichy as he tortures sexually. After reviewing SP found that there is mutual relationship between them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X