திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் முருகனை நெருங்கியது போலீஸ்.. முக்கிய உறவினர் அதிரடி கைது!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Robbery | தப்பிக்க பார்த்த மணிகண்டன்..விரட்டி பிடித்த எஸ்.ஐ

    திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.

    சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், பொம்மை முகமூடிகளை அணிந்து கொள்ளை அடித்தனர். மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.

    பெரிய கூட்டமே இருக்கு.. 16 பேரிடம் தீவிர விசாரணை.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அடுத்தடுத்த திருப்பம்! பெரிய கூட்டமே இருக்கு.. 16 பேரிடம் தீவிர விசாரணை.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அடுத்தடுத்த திருப்பம்!

    என்ன கைது

    என்ன கைது

    முதலில் இந்த கொள்ளையை வட இந்தியர்கள் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதன்பின் சிசிடிவி காட்சிகளில் தெரிந்த கொள்ளையர்களின் கால் நிறத்தை வைத்து, கொள்ளையடித்தது தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி, தஞ்சை, திருவாரூரில் தீவிர வாகன சோதனை நடந்தது.

    இரண்டு பேர் சிக்கினார்கள்

    இரண்டு பேர் சிக்கினார்கள்

    இந்த சோதனையில் திருவாரூரில் இரண்டு பேர் சிக்கினார்கள். விலை உயர்ந்த பெட்டிகளை கொண்டு காரில் சென்ற மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அவருடன் வந்த சுரேஷ் என்ற நபர் மாயமானார். இதையடுத்து தற்போது போலீசார் சுரேஷின் தாயை கைது செய்தனர்.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள்தான் கொள்ளையடித்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு மூளையாக முருகன் என்ற நபர் செயல்பட்டதும், அவர்களுக்கு பின் பெரிய குழு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

    தீவிரம்

    தீவிரம்

    இவரை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. தனிப்படை அமைத்தும் போலீசால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்தனர்.

    எப்படி தற்போது

    எப்படி தற்போது

    தற்போது இன்று காலை முருகனின் உறவினர் பிரதாப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் காலையில் இருந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் செய்யப்படும் விசாரணை மூலம் முருகனை விரைவில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Lalitha Jewellers Robbery: One man close the mastermind Murugan arrested today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X