படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன்.. கொள்ளையன் முருகன் வாக்குமூலம்
கொள்ளையன் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான்
Recommended Video
திருச்சி: திரும்பவும் படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன் என்றும் இதற்காகவே கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களை விரும்பி பார்ப்பேன் என்றும் போலீசில் கொள்ளையன் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான்.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் சுவரில் ஓட்டை போட்டு ரூ.12 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இதில், திருவாரூரை சேர்ந்த முருகன், சுரேஷ், மதுரையை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது, பின்னர், முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
தவறான ஊசி போட்டதால் இளம்பெண் மரணம்.. உறவினர்கள் போராட்டம்.. சென்னையில்!
விசாரணை
சுரேஷிடம் ஏற்கனவே விசாரணை நடந்து வரும் நிலையில், முருகனை 55 நாட்களுக்கு பிறகு, பெங்களூரில் இருந்து திருச்சி போலீசார் அழைத்து வந்துள்ளனர். முருகனிடம் 14 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்ட நிலையில், 7நாட்கள் மட்டுமே கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.
பொருட்கள்
இதையடுத்து, முருகனை ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிப்பதற்கு முன்பு, திருவெறும்பூர் அருகே நறுங்குழல் நாயகிநகரில் ஒரு வீட்டில் முருகன் 2 மாதமாக வாடகைக்கு தங்கியிருந்தது தெரியவந்தது. அதனால், அந்த வீட்டுக்கு முருகனை அழைத்து சென்ற போலீசார் அங்கிருந்து சில பொருட்களை கைப்பற்றினர்.
நகைகள்
பின்னர் கொள்ளை குறித்து போலீசாரிடம் முருகன் சொன்ன வாக்குமூலம் இதுதான்: "லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து விட்டு நகைகளுடன் மதுரைக்கு சென்றோம். அங்கு தராசு மூலம் நகைகளை பிரித்து கொண்டோம். பின்னர் சுரேஷ் திருவாரூருக்கு கிளம்பி சென்றான். நான் சென்னைக்கு சென்றேன்.
சினிமா படம்
போற வழியில்தான், பெரம்பலூர் அருகே கொள்ளையடித்த நகைகளை ஒரு காட்டில் புதைத்து வைத்தேன். ஆனால் திருவாரூரில் மணிகண்டன் மாட்டி கொண்டதால் நான் சரண் அடைய வேண்டிய நிலை வந்தது. இல்லையென்றால் கொள்ளையடித்த நகைகளை கொண்டு இன்னும் நல்ல படங்களை தயாரித்து இருப்பேன்.
குறும்படம்
தமிழில் சினிமா படம் எடுத்து நிறைய செலவாகி விட்டது.. அதனால், தெலுங்கில் என் அக்கா மகன் சுரேஷை வைத்து ஷார்ட் படம் ஒன்று தயாரித்தேன். ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது. திரும்பவும் படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க ஆரம்பித்தேன். இதற்காகவே கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களை விரும்பி பார்ப்பேன்.. எப்படி மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பது எப்படி என இந்த சினிமாக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன்" என்றான்.