திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேப்பர் பொறுக்கும் ஜப்பான் செல்வராஜ்.. கல்லை தூக்கி போட்டு கொன்ற காஜாமைதீன்.. திருச்சியில் அதிர்ச்சி

திருச்சியில் தொழிலாளி கல்லை தூக்கி போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்

Google Oneindia Tamil News

திருச்சி: ஜப்பான் செல்வராஜுவுக்கு பேப்பர் பொறுக்குவதுதான் தொழில்.. சாலையோரம் தூங்கி கொண்டிருந்த இவரை காஜாமொய்தீன் என்ற இளைஞர் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டார்.. கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது!

திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்தவர் ஜப்பான் செல்வராஜ்.. 55 வயதாகிறது.. பழைய பாட்டில், பேப்பர்களை பொறுக்கி அவைகளை சேமித்து விற்பனை செய்து வந்தார்... இவருக்கு 2 பெண்கள், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

lockdown crime: worker murdered near trichy

சில வருடங்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார்.. மனைவி மீது ஜப்பான் செல்வராஜுக்கு பிரியம் அதிகம்.. அதுவரை சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர், மனைவி இறந்த பிறகு அந்த வீட்டிற்கு செல்லவே விருப்பமில்லை.. அதனால் தன்னுடைய உறவினர்களிடம் தந்துதான் வளர்த்து வருகிறார்.
எப்போதாவது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அங்கு சென்று பார்த்து விட்டு வருவார்.

வழக்கமாக வேலையை முடித்ததும், கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள கடை வாசலில் தான் ஜப்பான் செல்வராஜ் தூங்குவார்.. விடிகாலை எழுந்ததும் பரபரப்பான வேலையில் இறங்கி விடுவார்.. அப்படித்தான் நேற்றிரவும் தூங்கினார்.. விடிகாலை 4 மணி இருக்கும்.. யாரோ ஒருவர் ஜப்பான் செல்வராஜ் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தார்.

கணவருடன் சண்டை.. பெரும் மன உளைச்சல்.. சேலையில் தூக்கு போட்டு உயிரை விட்ட கர்ப்பிணி சரண்யாகணவருடன் சண்டை.. பெரும் மன உளைச்சல்.. சேலையில் தூக்கு போட்டு உயிரை விட்ட கர்ப்பிணி சரண்யா

பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் உள்ளதால், போலீசாரும் விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் ஜப்பான் செல்வராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணையும் தொடங்கினர்

அப்போதுதான் கல்லால் அடித்து கொன்றவர் பெயர் காஜா மொய்தீன் என்பது தெரியவந்தது. இவர் எப்போதுமே அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருப்பாராம்.. மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. கொலையை செய்துவிட்டு, ரத்தத்தை பார்த்து பயந்துபோய் காஜாமைதீன் ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்தார்.

அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ஜப்பான் செல்வராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேரடி பஜாரில் தூங்கிக் கொண்டிருந்தவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

English summary
lockdown crime: worker murdered near trichy and police arrested one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X