ஸ்மார்ட் லுக்கில் வைகோ.. சீரியஸ் முகத்துடன் ஸ்டாலின்.. நடுவே நம்ம நேரு.. வைரலாகும் போட்டோ!
ஸ்டாலினும், வைகோவும் சந்தித்து பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
திருச்சி: ஸ்டாலினும், வைகோவும் "சீரியஸ் டிஸ்கஷன்" நடத்துவது போன்ற போட்டோதான் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தை கிளப்பி விட்டுள்ளது.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் "தேசம் காப்போம்" மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கி அழைப்பு விடுத்திருந்தார்.
அதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், நண்பர்களுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்ததன் பேரில் பலரும் வருகை தந்துள்ளனர்.
ஸ்டாலின், வைகோ
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினும், வைகோவும் திருச்சி வந்தனர். மாநாட்டுக்கு முன்னதாக இவர்கள் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. அந்த போட்டோ ஒரு ஓட்டல் அறையில் எடுக்கப்பட்டது போல இருக்கிறது.
சீரியஸ் டாக்
ஷர்ட்-பேன்ட்டை இன் செய்து கொண்டு ஸ்மார்ட் லுக்கில் வைகோ ஒரு சேரில் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் ஸ்டாலின் ஏதோ சீரியசான விஷயம் பேசிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு அருகில் திருச்சியின் முக்கிய அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நின்று கொண்டிருக்கிறார்.
சீட் பங்கீடு
விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் வைத்திருக்கலாமா, வேண்டாமா என்பது பற்றியும், சீட் பங்கீடுகள், கூட்டணி கட்சிகளுக்கான சீட் ஒதுக்கீடுகள் பற்றி ஸ்டாலின் வைகோவிடம் பேசியிருக்கலாம் என தெரிகிறது. திருமாவளவன் மாநாட்டிற்காக போனவர்கள், அவர் இல்லாமல் எப்படி கூட்டணி, சீட் குறித்தெல்லாம் பேசினார்கள் என்பதும் குழப்பமாக உள்ளது.
என்னதான் பேசினார்கள்?
வைகோ கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகப்பட்டவர்களுக்கு இன்று தெளிவான பதில் கிடைத்திருக்கும் என்றாலும், இவர்கள் அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் என்று மட்டும் சரியாக தெரியவே இல்லை!