காதல்.. ஜாலி.. கர்ப்பம்.. கை விட பார்த்த காதலன்.. கடைசியில் மனம் மாறி.. டும் டும் டும்!
6 மாத கர்ப்பிணி காதலியை திருமணம் செய்துள்ளார் இளைஞர்
Recommended Video
திருச்சி: காதலித்தார்.. ஜாலியாக இருந்தார்.. இதில், சூர்யா கர்ப்பமானது தெரிந்ததும் அலேக்காக கழட்டிவிட பார்த்த இளைஞர், இறுதியில் மனசு மாறி 6 மாத கர்ப்பிணிக்கு தாலி கட்டி உள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை பகுதியை சேர்ந்தவர் பிரதாப். படிப்பு வெறும் 10-ம் வகுப்பு வரைதான்.. அதே பகுதியில் சூர்யா என்ற பெண்ணை காதலித்தார்.. உன்னைதான் கல்யாணம் செய்துக்க போறேன் என்று சொல்லி, சொல்லியே சூர்யாவிடம் நெருக்கமானார் பிரதாப்.. விளைவு.. சூர்யா கர்ப்பமானார்!
மகள் 6 மாசம் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்து பெற்றோர் அதிர்ந்தனர்.. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டு, நேராக பிரதாப்பிடம் சென்றனர். தங்கள் மகளை கல்யாணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, பிரதாப் மறுத்துள்ளார்.
எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் பிரதாப் சூர்யாவை ஏற்றுக் கொள்ளாததால், நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தந்துவிட்டனர். இந்த புகாரின்பேரில் இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இருவருமே மேஜர் என்று தெரியவந்தது.. பிரதாப்பை உட்கார வைத்து பேசின போலீசார், அவருக்கு அறிவுரையும் தந்தனர். இதற்கு பிறகு பிரதாப் மனசு இளகியது.. இறுதியில் சூர்யாவை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னார்.
ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கிருந்தார் என்றே தெரியலை.. யாராவது மிரட்டியிருக்கலாம்.. வக்கீல்
இதையடுத்து அங்கேயே இருந்த ஒரு கோயிலில் சூர்யாவுக்கு தாலி கட்டினார் பிரதாப்! 6 மாத கர்ப்பிணியான காதலியை, இளைஞர் திருமணம் செய்த பச்சமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.