திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உறுதியா இருங்க... உரிய மரியாதை கிடைக்கும்... நம்பிக்கையூட்டிய ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளை திருச்சிக்கு அழைத்து சந்தித்த மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும் என அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவிடம் இருந்தும் அங்கு அதிமுகவை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி தலைவராக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை திருச்சியில் வைத்து சந்தித்த ஸ்டாலின், மனப்பிறழ்வு அடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

 தனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை தனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை

திருமண விழா

திருமண விழா

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் நடைபெற்ற பந்தல் சிவா இல்ல மண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்தார். பின்னர் தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அவர், அங்குள்ள சங்கம் ஹோட்டலில் வைத்து தஞ்சை மாவட்டத்தில் வெற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்.

வருத்தம்

வருத்தம்

இதையடுத்து இன்று காலை திருச்சியில் வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தனது வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், 11 மாவட்ட கவுன்சிலர்கள் இருந்தும் அதிமுகவை சேர்ந்த ஒருவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக வந்திருக்கிறார். அதை உங்களால் தடுக்க முடியவில்லையே என கூறியிருக்கிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இன்னும் ஒன்றரை ஆண்டில் உறுதியாக திமுக ஆட்சி அமைந்துவிடும் என்றும், அப்போது நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அரசியலை விட்டே ஓடி விடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், மனப்பிறழ்வு அடையாமல் உறுதியாக இருந்தால் உரிய மரியாதை தரப்படும் என ஸ்டாலின் அவர்களிடம் நம்பிக்கையூட்டியுள்ளார்.

கருணாநிதி சிலை

கருணாநிதி சிலை

உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு திருச்சியில் 31-ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஏற்பாடுகள் பற்றி கே.என்.நேருவிடம் ஆலோசித்துள்ளார். அதன் பிறகு விழுப்புரத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைப்பதற்காக சாலைமார்க்கமாக ஸ்டாலின் பயணித்துள்ளார்.

English summary
mk stalin spoke to tanjore, pudukottai local representatives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X