இளம் நடிகையுடன் தொடர்பாம்.. யார் அவர்.. அதிர வைக்கும் திருட்டு முருகனின் லீலைகள்.. திகுதிகு விசாரணை
முருகனுக்கு தமிழ் இளம் நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
Recommended Video
திருச்சி: எய்ட்ஸ் வந்த முருகனுக்கு தமிழ் நடிகை ஒருவருடன் தொடர்பு இருக்கிறதாம்.. இதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்!
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்தான். தற்போது தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில வாரியாக கொள்ளை நடித்தி உள்ளவன் முருகன். இப்போது லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து வருகிறான். இதனிடையே முருகனை பற்றிய பரபரப்பு தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
தெலுங்கு சினிமா
கொள்ளை அடித்த பணத்தை கொண்டு தெலுங்கு சினிமா உலகில் ஏகப்பட்ட ஆட்டம் போட்டுள்ளான் முருகன்.. துணை நடிகைகள், நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கடைசியில் எய்ட்ஸ் வரவும்தான் ஆட்டம் அடங்கி உள்ளது. பல் கொட்டி போய்.. உடம்பு மெலிந்து.. தலை மொட்டை ஆகி.. ஆளே உருக்குலைந்து போயுள்ளான்.
எய்ட்ஸ்
இந்த எய்ட்ஸ் நோய்க்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் முருகன் சிகிச்சை பெற்று வந்துள்ளான். இந்த ஆஸ்பத்திரி மட்டுமல்ல.. வேறு எந்த இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போனாலும் பெயரை மாற்றி சொல்லி உள்ளான். அதிலும் சிவா, ராஜா.. இந்த ரெண்டு பெயர்களைதான் தன் பெயருக்கு பதிலாக ஆஸ்பத்திரிகளில் முருகன் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளான்.
முருகன்
முருகன் ஜாலியாக இருந்ததில், சில நடிகைகளுடன் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதில், தமிழ் நடிகை ஒருவருடனும் முருகனுக்கு தொடர்பு உள்ளதாம்.
தமிழ் நடிகை
அவர் பிரபல இளம்வயது நடிகையாம். ஆனால் ஆளை பார்த்தால், நடிகை கூடவெல்லாம் இவருக்கு தொடர்பு இருக்குமா? தமிழில்.. அதுவும் பிரபலமான ஒரு இளம் நடிகை என்றால், ஈகோவை விட்டு.. தரத்தை விட்டு.. முருகனிடம் ஜாலியாக இருந்திருப்பார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், தமிழ் நடிகையுடன் தொடர்பு என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. அந்த நடிகை யார் என்பதை போலீசார் விசாரணையில் வெளியே கொண்டுவந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எ