திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி நாம் தமிழர் போராட்டம்! | Naam Thamizhar Party today hold protest

    திருச்சி: ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல் இதில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

    Naam Thamizhar party hold protest to shut down Eelam Tamils Special Camps

    அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர். இந்நிலையில் இந்த முகாம்களை உடனடியாக மூடிவிட்டு அப்பாவி ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சிறப்பு முகாம்களை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

    இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈழத்தமிழர் வதை கூடத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிறையில் உள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Naam Thamizhar Party today hold protest on demand to close the all special camps for eelam tamils.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X