ஆட்டை ஆட்டையை போட்டு.. அதில் குழம்பு வச்சு.. மாரிமுத்துவுக்கு இது தேவையா.. இப்ப டிரான்ஸ்பர்!
திருட்டு ஆட்டை சமைத்து சாப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்பர் தரப்பட்டுள்ளது
திருச்சி: மாரிமுத்துக்கு எதுக்கு இந்த வேலைன்னு தெரியல.. திருட்டு ஆட்டை சமைத்து சாப்பிட்டுவிட்டு படாத பாடு பட்டு வருகிறார்!
திருச்சி மாவட்டம் வாத்தலை ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் தான் மாரிமுத்து. இவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சக போலீசாருடன் சிறுகாம்பூர் பகுதியில் நைட் டியூட்டியில் ஈடுபட்டார்.
அப்போது திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அந்த பைக்கில் ஆடு ஒன்று இருந்தது. ஆனால் போலீசாரை பார்த்ததுமே அந்த இளைஞர், அந்த ஆட்டை கீழே விட்டுவிட்டு, பைக் எடுத்து கொண்டு பறந்தார்.
இதை கண்ட போலீசாரும், இளைஞர் ஆட்டை திருடி கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து, ஆட்டையும் மீட்டு ஸ்டேஷன் கொண்டு சென்றனர். ஆடு யாருடையது என்று மாரிமுத்து விசாரணை நடத்தினார். ஆனால் யாருமே ஆட்டை தேடி வரவே இல்லை, அந்த ஆட்டுக்கு ஓனரும் யார் என்றே தெரியவில்லை.
இந்நிலையில், பனையடி கருப்புசாமிக்கு, அந்த ஆட்டை மாரிமுத்து பலி கொடுத்துள்ளார். கடாவெட்டிய மாரிமுத்து, ஆட்டை சமைத்து சாப்பிட்டதும் குற்றச்சாட்டுகள் ஏராளமாக வர ஆரம்பித்தன. உயர் அதிகாரிகளுக்கு புகார் போனது. விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட எஸ்பி, சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
ஆட்டைய போட்ட ஆட்டையே, திரும்பவும் ஆட்டையை போட்டு அதை சமைத்து சாப்பிட்ட மாரிமுத்துவின் டிரான்ஸ்பர்தான் இப்போது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.