120 அடி நீள தேசியக் கொடி.. உணர்ச்சிகரமாக கையில் ஏந்தி.. துவரங்குறிச்சியில் எஸ்டிபிஐ பேரணி!
திருச்சி: துவரங்குறிச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 120 அடி நீள தேசியக்கொடியை கைகளில் ஏந்தி பேரணியில் 2 ஆயிரத்திக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, துவரங்குறிச்சியில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் திரளாக கலந்து கொண்டு பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் வரை, கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள் 120 அடி நீள தேசியக்கொடியை கைகளில் கொண்டு கூட்ட மேடை வரை எடுத்து வந்தனா்.
துவரங்குறிச்சி நகர ஜமா அத்துல் உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், அனைத்து மஹல்லா ஜமா அத்துகள் இணைந்து பெரியபள்ளிவாசல் சாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் டி.எஸ்.எஸ்.ஏ.அப்துஸ் சலாம் தலைமை வகித்தாா். மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் எம்.சிராஜ்தீன் தாவூதி வரவேற்று பேசினார்.
துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியிலிருந்து பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம் வரை, கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள் 120 அடி நீள தேசியக்கொடியை கைகளில் கொண்டு கூட்ட மேடை வரை எடுத்து வந்தனா். இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 2 ஆயிரத்து மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
Exclusive: யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல... ஐ.யூ.எம்.எல். அபுபக்கர் எம்.எல்.ஏ. ஓபன் டாக்
எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவா் நெல்லை.முபாரக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடா்பாளா் திருச்சி எஸ்.எம்.வேலுச்சாமி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலப் பொதுச் செயலா் ஏ.ஹாலித் முகமது, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலா் சிபிச்சந்தா், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசியக்குழு உறுப்பினா் எஸ்.முஸ்தபா ஆகியோா் கண்டன உரையாற்றினா். துவரங்குறிச்சி பெரிய பள்ளிவாசல் துணை இமாமும், நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலருமான பி.சிக்கந்தா் பாஷா நன்றி கூறினாா்.