"சோட்டா சோட்டா நஹி.. படா படா" பைத்தியக்காரங்ககிட்ட நாட்டை குடுத்துட்டு நாம படற பாடு இருக்கே.. சீமான்
திருச்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி: "குரங்கனியில தீப்பிடிச்சு எரிஞ்சுது.. அதுவா அணைஞ்சது.. எவனும் வரல... இதுவா வளர்ச்சி" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், தீவிரவாதத்தை ஒழிப்போம்னு சொன்னாங்க. கருமம்... இந்த நாலுமே ஒழியல... மக்கள் ஒழிஞ்சதுதான் மிச்சம்.
நாயை கல்லெடுத்து எறிஞ்சா 4 தெரு தள்ளி குலைக்குமே.. அதுமாதிரி தூரமா போய் திட்டுறது.. சீமான் நக்கல்
நல்லா பேசுவாங்க
இவங்களுக்கு நல்லா பேச மட்டுமே தெரியும்.. 50 நாள் பொறுத்திருங்கள்.. சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க.. நம்மாளுங்க அதை நம்பி மேலேயே பார்த்துட்டே இருப்பாங்க. ஆனா, "சோட்டா சோட்டா நஹிஹே.. படா படாஹே.." என்று சொல்லிடுவாங்க. அதற்குள் இவன் போய் சேர்ந்துடுவான் மேலே. பைத்தியக்காரங்ககிட்ட நாட்டை குடுத்துட்டு இந்த மக்கள் படற பாடு இருக்கே?
இதுவா வளர்ச்சி?
இனிப்பான, பசப்பான, கவர்ச்சியான திட்டங்களை பார்த்து ஏமாறாதீர்கள். இவங்க காட்ற டெவலப்மென்ட் என்ன தெரியுமா? நாம செத்தா கட்டையில எரிக்காம கரண்ட்ல எரிக்கிறதுதான் டெவலப்மென்ட். நாட்டின் பாதுகாப்புக்கு நீ என்ன செஞ்சிருக்கே? இந்த டிவியில ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்னு காட்டுவான். நான் வளருகிறேனே மம்மி..ன்னு கால் கட்டை விரலை தூக்கி சின்ன பையன் எழுந்து நிப்பான்.
கப்ல வாரினோம்
குரங்கனியில தீப்பிடிச்சு எரிஞ்சுது.. அதுவா அணைஞ்சது.. எவனும் வரல. சென்னையில கடல்ல எண்ணெய் கொட்டுச்சு. கப்பலும் கப்பலும் மோதிடுச்சுன்னு சொன்னாங்க. அதை கப்ல எடுத்து வாரிக்கிட்டு இருந்தோம். அந்த சமயத்துல வெளிநாட்டில இருந்த மோடி சொல்றார், "இந்தியாவை பார்த்து நாடு வியக்கிறது"ன்னு, இதுவா வளர்ச்சி!
உலக அழகி
கஜா புயல்ல பாதி நாடு அழிஞ்சு போச்சு. ஆனா ஒரு பொம்பள புள்ள உலக அழகியாயிடுச்சுன்னு அதுக்கு வாழ்த்து செய்தி பதிவிடறார் மோடி. ஒரு வருத்த செய்தி பதிவிட முடியாதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.