போலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை
கிளி பேசி கேட்டிருப்போம், பாகனின் கட்டளைக்கு யானை பதில் சொல்லி பார்த்திருக்கிறீர்களா? ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் பாகனின் கட்டளைக்கு பதில் சொல்கிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பட்டத்து யானை ஆண்டாள் என்றாலே எல்லோருக்கும் செல்லம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்ய காவிரி நீரை கொண்டு வருவது முதல் அனைத்து கைங்கரியங்களையும் செய்வது ஆண்டாள்தான். பாகன் பேசப் பேச அதற்கு காதுகளை ஆட்டி கழுத்து மணிகள் குலுங்க பதில் சொல்கிறாள் ஆண்டாள். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஆண்டாள் யானை கடந்த 36 வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலிலேயே வாழ்ந்து வருகிறது. ராஜேஷ் என்பவர் யானையைக் கவனித்து வருகிறார்.
பாகன் ராஜேஷ் கேள்வி கேட்டால் அதற்கு ஆண்டாள் யானை அழகாக பதில் சொல்லும். அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பாகன் ஆண்டாளுடன் பேசிக்கொண்டே செல்கிறார். சீக்கிரம் போகலாமா என்று கேட்க அதற்கு ஆண்டாள் சரி என்று சொல்கிறது.
தி.நகரா இது??.. கொஞ்சம் கூட கூட்டமே இல்லை.. தீபாவளி வியாபாரம் படு மோசம்.. பரபரப்பு வீடியோ!
கையைக் கட்டு என்று பாகன் சொன்னவுடன் தும்பிக்கையை மடித்துக் கொள்கிறது. கழுத்து மணிகள் குலுங்க காதை ஆட்டி ஆட்டி தனது பாகனிடம் ஒலியெழுப்பியவாறே ஆண்டாள் பேசும் காட்சிகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவில் பட்டத்து யானை ஆண்டாள் என்றாலே எல்லோருக்கும் செல்லம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்ய காவிரி நீரை கொண்டு வருவது முதல் அனைத்து கைங்கரியங்களையும் செய்வது ஆண்டாள்தான்.