திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்!

நடிகை நெருங்கி பேசியதால் நகை தந்தோம் என்று சுரேஷ் வாக்குமூலம் தந்துள்ளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    திருச்சி: "அந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் நகையை எடுத்து தந்துட்டோம்" என்று கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலமாக தந்துள்ளானாம். ஆனால் அந்த நடிகை, இந்த நடிகை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரை சொல்லி குழப்பி தள்ளுகிறானாம்!

    முருகன் கொள்ளையடித்ததை முழுக்க முழுக்க சினிமாவில் போட்டதுடன், ஐதராபாத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளான். புதுசா குடி வந்திருப்பது யார் என்று அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அவர்களிடம் நான் ஒரு புரொடியூசர், இனிமே எமக்கு இந்த ஐதராபாத் தான் கடைசிவரை என்று சொல்லி நட்பாக பேச ஆரம்பித்துவிடுவானாம்.

    suresh says about tamil actress

    படம் எடுக்கும்போது நிறைய ஹீரோக்களை போய் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் எல்லாருமே லட்சம், கோடிகளில் சம்பளம் கேட்டதால்தான், அக்கா பையன் சுரேஷை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முடிவு செய்தான் முருகன்.

    2 படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டு, அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தபோதும், நடிகைகளிடம் ஜாலியாக இருந்தது கொஞ்சம் கூட குறையவில்லை. தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்த மாமாவும், மருமகனும் பணத்தை கொட்டி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

    கால்ஷீட் இல்லை என்று நடிகை எங்களுக்கு சொல்லிவிட்டார். ஆனால், நாங்கள் நகைக்கடை வைத்திருக்கிறோம் என்று சொன்னதுமே நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார். கொள்ளையடித்த ஒரு நகையை தந்ததும் மறுக்காமல் வாங்கி கொண்டார், ஆனால் அதற்கு பிறகு அந்த நடிகையை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை என்று சுரேஷ் சொல்லி உள்ளான்.

    ஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்!ஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்!

    ஆனால், அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுரேஷ் நடிகைகள் பற்றி சொன்ன இந்த வாக்குமூலங்கள் எல்லாமே உண்மைதானா என்பதை முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் மொத்தமாக தெரியவரும்.

    எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், சம்மந்தப்பட்ட நடிகைகளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிக்க உள்ளனர். அது மட்டும் இல்லை.. நாம இப்படி இருந்தால் இந்த கவர்ச்சிகர சினிமா உலகம் தன்னை மதிக்காது என்று எண்ணி அப்போதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற முடிவுக்கு வந்துள்ளான். அதன்படியே லட்சக்கணக்கில் பணம் செலவழித்து சர்ஜரியும் செய்து கொண்டான்.
    ஏராளமான கொள்ளையடித்த நகைகள் தம்மிடம் இருப்பதால், இதை காட்டியே சம்பந்தப்பட்ட நடிகைகளை விழ வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் அந்த நடிகைகள் யார் என்பதை போலீசார் லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அதனால், இந்த கேடிகளுடன் தொடர்பில் இருந்த நடிகைகளின் அடி வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறது.

    English summary
    lalitha jewellery thief suresh confessed to trichy police about the tamil actress and gifted her jewel
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X