ஸ்ரீரங்கம் கோயிலில் தாய்லாந்து நாட்டு பெண்கள்.. தமிழ் பெண்களுக்கு இணையாக சேலை அணிந்து தரிசனம்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தாய்லாந்து நாட்டிலிருந்து நேற்று வந்த 10 பெண்கள் இந்து முறைப்படி சேலை உடுத்தி வந்தது தமிழ்ப் பெண்களை வியக்க வைத்தது.
கோயிலுக்கு செல்லும் பெண்கள் சேலையும், ஆண்கள் வேஷ்டியும் அணிந்தும் செல்வதுதான் இந்து கலாசார மரபு. நம்மவா்கள் தற்போது இதை மாற்றி அவரவா் விரும்பம்போல் உடையணிந்து கோயிலுக்கு வருகிறாா்கள்.
இதற்கு காரணம் அந்நிய கலாசார மோகமே. ஆனால் இந்தியக் கலாசாரத்தின் மீது ஆா்வம் கொண்ட அந்நியா்கள் நம் கலாசாரத்தின் மீது ஆா்வங்கொண்டு அதைப் பின்பற்றவும் செய்கின்றனா்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தாய்லாந்திலிருந்து வந்திருந்த10 பெண்கள் 5 ஆண்களில் அனைத்துப் பெண்களும் சேலை உடுத்தி நெற்றியில் விபூதி, குங்குமமிட்டு பய பக்தியுடன் தரிசித்தனா்.
இதைபோல் ஆண்கள் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு தரிசித்தனா். ஆனால் தமிழக பக்தா்களில் பெரும்பாலானோா் தங்களது பெண்களை ஜீன்ஸ்,டீசா்ட் உடுத்தி கவா்ச்சியாக கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.
காஷ்மீர்.. சிஏஏ போராட்டம்.. இரண்டையும் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா அதிரடி கருத்து!