திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.. பணால் ஆன பிளான்.. மாமியார் வீட்டில் 1-2-3!

Google Oneindia Tamil News

திருச்சி: 18 வயது சாந்தாவை இழுத்து பிடித்து காருக்குள் தள்ளி கடத்தி சென்றுள்ளார் பூவசரன் என்பவர்.. கடத்தி சென்றாலும் பழனி முருகன் கோயிலில் வைத்துதான் சாந்தாவுக்கு தாலி கட்ட வேண்டும் என்றும் பிளான் செய்திருந்தார்... ஆனால், கல்யாணம் ஆகாமலேயே மாமியார் வீட்டுக்கு போயுள்ளார் பூவசரன்.

திருச்சி திருவானை காவல் கொண்டையன்பேட்டை வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மகள் சாந்தா..18 வயதாகறிது.. அப்பகுதியில் அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்... பொதுத்தேர்வும் எழுதியிருக்கிறார்..

three arrested for girl kidnaping case near srirangam

இந்நிலையில் சாந்தாவின் அத்தை மகள் கோமதி அவரை கடைக்குப் போகலாம் என்று கூப்பிட்டுள்ளார்.. அதன்படி சாந்தாவும் - கோமதியும் கடைக்கு சென்றனர்.. காவேரி பிரிட்ஜ் அருகே சென்றபோது, பூவரசன் நின்று கொண்டிருந்தார்.

பூவரசன் சாந்தாவை ஒருதலையாக காதலித்து வருபவர்.. அத்தை மகனும்கூட... பிரிட்ஜ்-ல் பூவரசன் நிற்பதை பார்த்ததும் சாந்தா அதிர்ந்துவிட்டார்.. அப்போதுதான் கோமதி வேண்டுமென்றே கடைக்கு போகலாம் என்று சொல்லி சாந்தாவை அழைத்து வந்தது தெரியவந்தது.. இதனால் பயந்துபோன சாந்தா, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.. ஆனால் பூவரசன் தயாராக நின்ற ஒரு காரில் சாந்தாவை பிடித்து உள்ளே தள்ளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதை பற்றி உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.. இதனிடையே சாந்தாவை பூவரசன் பழனி முருகன் கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது . உடனே போலீசார் உறவினர்களுடன் விரைந்து சென்றனர்... ஒட்டன்சத்திரம் ரெட்டியார் சத்திரம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த அந்த காரை மடக்கினர். காருக்குள் அலறி கொண்டிருந்த சாந்தாவையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சாந்தாவை கட்டாய கல்யாணம் செய்ய முயன்ற பூவரசன், கோமதி, உறவினர் ஜெயக்கொடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு சம்பந்தம் உள்ளதால் அவர்களையும் தேடி போலீசார் வருகிறார்கள்... மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள மாப்பிள்ளை பூவசரனுக்கு இப்போதுதான் வயது 20 ஆகிறது!!

English summary
three arrested for girl kidnaping case near srirangam due to love issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X