கனமழை: திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Recommended Video
திருச்சி: கனமழையால் திருச்சி, அரியலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது மழை வெளுத்தது. பின்னர் ஆங்காங்கே பரவலாக மட்டும் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் சென்னை புறநகரில் வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய பெருமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
சென்னை தாம்பரத்தில் மட்டும் 15 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுகு 1 வாரம் கனமழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிக கனமழை கொட்டியது. இதனையடுத்து திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டஙகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
3 பேர் பலி
இதனிடையே கடலூரில் கனமழையால் நள்ளிரவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாகினர்.