இன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் சென்னை, பெங்களூருக்கு விமான சேவை துவங்குகிறது. இரண்டு விமானங்கள் சென்னைக்கும், ஒரு விமானம் பெங்களூருவுக்கும் வந்த செல்ல உள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைவான அளவில் விமான சேவைகள் தொடங்கப்பபடுகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் புயல் பாதிப்பு காரணமாக விமான சேவை 28ம் தேதி துவங்குகிறது. அந்த நகருக்கு மட்டும் விமானங்கள் மற்ற நகரங்களில் இருந்து செல்லாது. மற்றபடி, மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் இடையே விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்வர்களும் அந்த மாநில அரசிடம் இ பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது. அதேபோல் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கி கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை பெங்களூருவுக்கு விமான சேவைகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு இரண்டு முறையும் பெங்களூருவுக்கு ஒருமுறையும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான அட்டவணையை திருச்சி விமான நிலைய மேலாளர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி 6E-7145 என்ற விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 10.45 மணிக்கு வந்து சேருகிறது. அதேவிமானம் (6E-7146) காலை 11.15மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது
தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை!
இதேபோல் 6E-7738 என்ற விமானம் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு இரவு 8.20 மணிக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு அதேவிமானம் (6E-7739) இரவு 8.55 மணிக்கு திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்கிறது.
6E-7149 என்ற விமானம் சென்னையில் இருந்து திருச்சிக்கு இரவு 9.20 மணிக்கு வந்து சேருகிறது. அதேவிமானம் (6E-7151) இரவு 9.50 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது