திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை-காரைக்கால் பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 4 ரயில்கள்… மார்ச் 31 வரை ரத்து

Google Oneindia Tamil News

திருச்சி: நிர்வாக காரணங்களுக்காக தஞ்சை, காரைக்கால் பயணிகள் ரயில்கள் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருச்சி ரயில்வே அலுவலக மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:தெற்கு ரயில்வே சார்பில் நிர்வாக காரணங்களுக்காக நான்கு வழித் தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களை முழுமையாகவும், பாதியாகவும் ரத்து செய்துள்ளது.

Trains from tanjore - karaikal will be canceled till march 31 for administrative reasons

அதன்படி திருச்சி-தஞ்சை-திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண் 76820 மற்றும் எண் 76823 ஆகிய 2 ரயில்கள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் திருச்சி-காரைக்கால்-திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண் 76854 மற்றும் எண்.76853 ஆகிய இரண்டு ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையும், காரைக்குடி-பட்டுக்கோட்டை- காரைக்குடிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண் 06856 மற்றும் எண் 06855 ஆகிய 2 ரயில்கள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருநெல்வேலி-மயிலாடுதுறை-திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் எண் 56822 மற்றும் எண் 56821 ஆகிய இரண்டு ரயில்கள் மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை இடையே இன்று முதல் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Trains from Tanjore - karaikal will be canceled till March 31 for administrative reasons, trichy railway department announced through a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X