திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சி.. தொடர் மழையால் இடிந்த சுவர்.. 2 வயது சிறுவன் பரிதாப பலி

Google Oneindia Tamil News

திருச்சி: தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 2 வயது சிறுவன் பலியான சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திருச்சி: தொடர் மழை... இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.. 2 வயது சிறுவன் பரிதாப பலி..!

    திருச்சி கே கே நகர் கே. சாத்தனூர், காவல்காரன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கு மனைவியும் ஹரிகிருஷ்ணன் என்ற 2வயது மகனும் உள்ளனர்.

    Trichy: 2-year-old boy killed when a wall collapsed

    கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் மழைநீரில் ஊறியிருந்தது. இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் அந்த சுவற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ஹரி கிருஷ்ணனின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கிய ஹரி கிருஷ்ணனை காப்பாற்ற முயன்றனர்.

    கையில் கத்தியுடன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மிரட்டல் விடுக்கும் 3 சிறுவர்கள்.. அதிர்ச்சிகையில் கத்தியுடன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மிரட்டல் விடுக்கும் 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி

    ஆயினும் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் சிறுவன் ஹரிகிருஷ்ணன் சிறிது நேரத்தில், மூச்சுத்திணறி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்து விட்டான். தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    The incident in which a 2-year-old boy was killed when a wall collapsed due to continuous rain has caused tragedy in Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X