திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடத்தையில் சந்தேகம்.. நள்ளிரவில் மனைவி, மகன் மீது கல்லைத் தூக்கிப்போட்டு கொன்ற கணவன்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவன் கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளார். அத்துடன் மகனையும் கல்லை போட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இந்திய ராணுவத்திற்காக திருச்சியில் ரெடியாகும் புதிய வகை துப்பாக்கி

    மனைவி,மகன் இருவரையும் கல்லால் அடித்துக் கொன்றுவிடடு தப்பியோடிய கணவனை சோமரசம்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 52). இவருக்கு ராதிகா (வயது 36) என்ற மனைவியும், ரோகித் (வயது 14) கீர்த்திவாசன் (வயது 8 ) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

    ஒரு பக்கம் ஆபாச சைட்டுகள்.. இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள்.. இது சரியா.. என்ன செய்ய போகிறோம்?!ஒரு பக்கம் ஆபாச சைட்டுகள்.. இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள்.. இது சரியா.. என்ன செய்ய போகிறோம்?!

    அடிக்கடி தகராறு

    அடிக்கடி தகராறு

    கூலித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக சரியான வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மாரியப்பன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கல்லை போட்டு கொலை

    கல்லை போட்டு கொலை

    இந்த நிலையில் மாரியப்பன் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது குடிசை வீட்டின் எதிரே பாயில் படுத்திருந்த மனைவி, மகன் கீர்த்திவாசன் இருவர் தலையிலும் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு மகன் ரோகித்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போலீஸ் வலைவீச்சு

    போலீஸ் வலைவீச்சு

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியப்பன் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தண்டனை முடிந்து திருமணம்

    தண்டனை முடிந்து திருமணம்

    இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தப்பியோடிய மாரியப்பன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்தார் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    English summary
    Suspicious of his wife's behavior in Somarasampettai, Trichy district, her husband threw a stone at her and killed her. The incident in which her son was stoned to death is also shocking.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X