திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கொள்ளையடித்த முருகன் பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை. இந்த கடையில் கடந்த ஆண்டு அதிகாலை இரு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ 12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Trichy Lalitha Jewellers robberer Murugan died in Bengaluru

விசாரணையில் இந்த கொள்ளையை திருவாரூரை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியதாக தெரியவந்தது. 44 வயதான முருகன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கொள்ளையடித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானாவில் கொள்ளையடித்த பிறகு முருகன் கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையிலும் முருகன் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

கொடூர நோயால் பாதிக்கப்பட்டு உடல்மெலிந்து காணப்பட்ட முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கொதிக்கும் எண்ணெய்யில் அசால்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே!கொதிக்கும் எண்ணெய்யில் அசால்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே!

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகன் உயிரிழந்தார்.

English summary
Trichy Lalitha Jewellers robberer Murugan died in Bengaluru after he was taking treatment for his illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X