பயணிகளின் கவனத்திற்கு.. 30ம் தேதி வரை திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரத்து!
திருச்சி: திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :
திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை.. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது!