திருச்சி வையம்பட்டியில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. பரபரப்பு
திருச்சி: மணப்பாறை அருகே வையம்பட்டியில் செயல்பட்டு வந்த விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில், விழுப்புரம் மாவட்டம் அரசூரை சோ்ந்த கணபதி என்பவா் காமதேனு பொம்மை செய்யும் கலைக்கூடத்தை நடத்தி வந்தார். இதில், தற்போது விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் செய்யும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.
தற்போது, விநாயகா் சிலைகள் பொது இடங்களில் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த கலைக்கூடத்துக்கு நேற்று வந்த வருவாய் வட்டாட்சியா் தமிழ்கனி, காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினா் கலைக்கூடத்தை பூட்டி சீல் வைத்து சென்றார்கள்
வேலை இழந்த தொழிலாளர்களே.. 3 மாத சம்பளம் தருகிறது மத்திய அரசு.. அதை வாங்க என்ன தகுதி!
இதையடுத்து, சனிக்கிழமை விநாயகா் சதுா்த்தியையொட்டி பொதுமக்களுக்கு விற்பனைக்காக செய்யப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 150 சிலைகள் கலைக்கூடத்துக்குள் முடங்கியுள்ளது என கலைக்கூட நிர்வாகி வேதனை தெரிவித்தார்