அம்மா தாயே.. மாரியாத்தா.. லலிதா ஜுவல்லரி கொள்ளையர்கள் சிக்கிய சந்தோஷம்.. போலீஸார் போட்ட மொட்டை!
கொள்ளையர்கள் பிடிபட்டதால், 2 போலீசார் நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர்
திருச்சி: எல்லாம் நல்லாபடியா முடிஞ்சா மொட்டை அடிச்சிக்கிறதா வேண்டிக்கிட்டாங்க.. அதான் அம்மா.. தாயே.. மாரியாத்தா என்று சொல்லி ஆளுக்கு ஒரு மொட்டையை போட்டு, நேர்த்திகடன் செய்து விட்டு வந்துள்ளனர் போலீசார்!
9 மாசத்துக்கு முன்பு அதாவது கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று, திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது. யார் கொள்ளை அடித்தார்கள் என்று தெரியவே இல்லை.

அந்த பேங்கின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே வந்த கொள்ளையர்கள், 470 பவுன் தங்க நகைகளும், ரூ.19 லட்சத்தையும், அள்ளி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் எத்தனையோ வழிகளில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
4 தனிப்படை அமைக்கப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் விஜயகுமார், மற்றும் காவலர் ஹரிஹரன் இருவரும், கொள்ளையர்கள் சிக்கினால் முடி காணிக்கை கொடுப்பதாக வேண்டிக் கொண்டனர்.
இப்போது 9 மாசத்துக்கு பிறகு கொள்ளையர்களை திருச்சி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான், இந்த வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு சுவரில் போட்ட ஓட்டை, மாஸ்க், என எல்லாமே ஒரே மாதிரி கொள்ளையாக தெரிந்ததே முக்கிய காரணம்.
சுரேஷ், முருகன், வெல்டர் ராதாகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த கொள்ளையர்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதனால்தான் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்த உடனேயே, ஹரிஹரன், விஜயகுமாரும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த கிளம்பி விட்டனர், விஜயகுமார் ஒப்பிலியப்பன் கோயிலிலும், ஹரிஹரன் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் மொட்டை அடித்து வந்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications