திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்கனவே வாய்க்கா தகராறு.. ஸ்டேஷனில் முத்தமிட்டு சிக்கிய எஸ்ஐ இன்னொரு பெண்ணுடன் ஓட்டம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்-வீடியோ

    திருச்சி: திருச்சியில் பெண் போலீஸை முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இன்னொரு பெண்ணுடன் ராஜபாளையத்துக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போலீஸார் அவரை பிடிக்க ராஜபாளையத்துக்கு விரைந்துள்ளனர்.

    திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி இரவு பணியில் இருந்த பெண் போலீஸ் (32) ஒருவரை அங்கு பணியாற்றும் எஸ்ஐ பாலசுப்பிரமணியன் (54) கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.

    இந்நிலையில் பாலசுப்பிரமணியன் மீது அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த எஸ்ஐ பாலசுப்பிரமணியனை போலீஸ் எஸ்பி பணிநீக்கம் செய்தார். இந்தநிலையில் பெண் போலீஸுக்கு முத்தம் கொடுத்த காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

    போலீஸில் வழக்கு

    போலீஸில் வழக்கு

    இதையடுத்து இரு தரப்பிலும் விசாரணை செய்த டிஎஸ்பி, எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்தது, பாலியல் தொந்தரவு கொடுத்தது, மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    37 வயது பெண்ணுடன் பழக்கம்

    37 வயது பெண்ணுடன் பழக்கம்

    இந்நிலையில் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவர் என்பதால் எஸ்ஐ பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டார். பாலசுப்பிரமணியனின் சொந்த ஊர் திருமலை அருகே கொடாப்பு ஆகும். அங்கு அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    தகவல்கள்

    தகவல்கள்

    37 வயது பெண்ணும், எஸ்ஐ பாலசுப்பிரமணியனும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையில் பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணை அழைத்து கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்

    இதையடுத்து அவரை பிடிக்க சோமரசம்பேட்டை போலீஸார் ராஜபாளையத்துக்கு சென்றனர். கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணுடன் எஸ்ஐ தலைமறைவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Trichy SI Balasubramaniam who gives sex torture to lady constable is absconded to Rajapalayam with another woman, sources say.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X