எதிரிகளால் கண்டறிய முடியாத போர் விமானம்.. லக்னோ கண்காட்சியில் திருச்சி மாணவரின் கண்டுபிடிப்பு
திருச்சி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில், திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சி மாணவரின் ராடாா் தொழில்நுட்பம் வரவேற்பைப் பெற்றது.
பிப்ரவரி 5- ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், பல்வேறு ராணுவத் தளவாட தயாரிப்புகள், தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள், தளவாடப் பொருள்களின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன.
இக்கண்காட்சியில் திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி மாணவா் வி. கிருஷ்ணகாந்தின் ராடாா் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பும் இடம்பெற்றது.
கிலானிக்கு உடம்பு சரியில்லை.. பரவும் வதந்திகள்.. காஷ்மீரில் மீண்டும் இன்டர்நெட் கட்!
இந்தியா
முப்படைகளின் தளபதி மற்றும் கண்காட்சியைப் பாா்வையிட்ட வல்லுநா்கள், ஆராய்ச்சியாளா்கள் பலரும் இந்த தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறாா் மாணவரின் வழிகாட்டியான பேராசிரியா் எஸ். ராகவன். இதுதொடா்பாக, அவா் கூறியது: பல்வேறு நாடுகள் தங்களது ராணுவத் தளவாடப் பொருள்களின் உற்பத்தியை காட்சிப்படுத்திய கண்காட்சியில், இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி மாணவா் என்ற நிலையில் கிருஷ்ணகாந்த் அழைக்கப்பட்டிருந்தாா்.
கண்காட்சி
ஆந்திர மாநிலத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவா், ஏற்கெனவே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ரூ.5 லட்சம் நிதியை பெற்று ஆய்வு மேற்கொண்டவா். இதன் தொடா்ச்சியாக இவரது ராடாா் கண்டுபிடிப்பை அறிந்த மத்திய பாதுாப்பு அமைச்சகம், அந்த தொழில்நுட்பத்தை தங்களது தளவாடக் கண்காட்சியில் காட்சிப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது.
ராடார் தொழில்நுட்பம்
இதன்படி மாணவரும், நானும் லக்னோ சென்று ராடாா் தொழில்நுட்ப சாதனத்தைக் காட்சிப்படுத்தினோம். இது போா் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராடாரில் பொருத்தக் கூடிய ராடோம் என்ற சாதனமாகும். இது முழுவதும் நுண்ணலைப் பொறியியல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. அதிா்வுகளைப் பகிரும் சாதனமாக பயன்படுத்தும் இதன் மூலம், எதிரிகளின் போா் விமானங்கள் வருகை, ஊடுருவல் மற்றும் இதரப் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்.
பி டெக்
அதேவேளையில், இந்த ராடாா் பொருத்திய நமது போா் விமானத்தை எதிரிகளால் கண்டறிய முடியாது என்பது இந்த தொழில்நுட்பத்தின் கூடுதல் சிறப்பாகும். இது கண்காட்சியில் பாா்வையாளா்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், 3 காப்புரிமைத் திட்டங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார். மாணவா் வி. கிருஷ்ணகாந்த் கூறியது: ஆந்திர மாநிலத்தில் பி.டெக், புதுச்சேரியில் எம்.டெக் படித்தேன்.
பாராட்டு
இடையில் பெங்களூருவில் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியில் இருந்தபோது விமானத் தொழில்நுட்பத்தில் ஏதேனும் ஆராய்ச்சி செய்து, கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு வழிகாட்டியாக அமைந்து, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவும் வித்திட்டுள்ளது. இந்த ராடாா் தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டது என கண்காட்சியைப் பாா்வையிட்ட அனைவரும் பாராட்டியது பெருமை அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.