ஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில்
Recommended Video
திருச்சி: புகழேந்தி விவகாரம் தொடர்பாக எல்லாவற்றையும் டிவியில் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக டிடிவி தினகரனின் அமமுகவிலிருந்து முக்கியமானவர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் செந்தில் பாலாஜி, கலைராஜன், தங்கதமிழ்ச் செல்வன், பரணி கார்த்திகேயன் என பலர் வெளியேறி திமுகவில் இணைந்தனர்.
அதுபோல் புதுவையில் அமமுக கூடாரமே காலியாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்தது சசிகலாவின் விசுவாசியான புகழேந்தியும் அடுத்த கட்சிக்கு தாவுவதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. தற்போதெல்லாம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றால் சர்ச்சைக்குரிய வகையில் கட்சித் தலைவரை விமர்சனம் செய்துவிட்டு அதை அவர் கண்ணில் படும்படி வீடியோவாக அனுப்பினால் போதும்.
அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்து இந்தியா!
தொண்டர்களுடன் பேசும் வீடியோ
கட்சித் தாவல் தானாக நிகழ்ந்துவிடும். அந்த வகையில் புகழேந்தி கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொண்டர்களுடன் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நாம் போகும் போது நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன்.
எடிட்டட்
14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகழேந்தி கூறுகையில் வீடியோ உண்மைதான். ஆனால் அதில் எடிட் செய்யப்பட்டுள்ளது.
தினகரன்
நான் பேசியதை வேண்டுமென்றே ஐடி பிரிவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நான் தவறு செய்திருந்தால் கட்சி தலைமை என்னை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா என்றார் புகழேந்தி. இந்த நிலையில் இதுகுறித்து திருச்சியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
விசாரணை
அப்போது அவர் கூறுகையில் புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தினகரன்.