தனிமையில் இருந்தனர்.. வீடியோ எடுத்தோம்.. பலாத்காரத்துக்கும் முயன்றோம்.. காதலனை ஆற்றில் போட்ட கும்பல்
காவிரி ஆற்றில் வீசப்பட்ட மாணவன் உடல் கரை ஒதுங்கியது
Recommended Video
திருச்சி: "தனிமையில் காதல் ஜோடி ஜாலியாக இருந்தனர்.. அதை நாங்கள் வீடியோ எடுத்தோம்.. வீடியோவை காட்டி மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றோம்" என்று காதலன் ஜீவித்தை காவிரி ஆற்றில் தூக்கி போட்ட போதை இளைஞர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இப்போது ஜீவித்தின் உடல் கரை ஒதுங்கி உள்ளது.
திருச்சி அண்ணா பொறியியல் காலேஜில் படிப்பவர் ஜீவித். இவர் துறையூரை சேர்ந்தவர். இவர் கடந்த 30-ம் தேதி, மதியம் 3 மணிக்கு கொள்ளிடம் பழைய பாலம் அருகே பேசி கொண்டிருந்தனர்.
இதனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கவனித்து கொண்டே இருந்தது. அவர்கள் அந்த பகுதியில் உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டும், கஞ்சா புகைத்துக் கொண்டும் இருந்தனர்.
காதலனுடன் ஆற்றுப் பாலத்தில் ஜாலி.. காதலியை துரத்திய கும்பல்.. காதலனை ஆற்றில் வீசிய கொடூரம்!
வீடியோ
காதலர்கள் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்தது. இதை பார்த்துவிட்ட ஜீவித் இதை பற்றி அவர்களிடம் கேட்டுள்ளார். இது தகராறாக உருவெடுத்துள்ளது. பிறகு அந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது. 5 பேருமே ஒரே நேரத்தில் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதும், ஜீவித்தால் தடுக்க முடியவில்லை. அதனால், "என்னை பத்தி கவலைப்படாதே.. நீ தப்பிச்சு ஓடிடு" என்று சொன்னார்.
பலாத்கார முயற்சி
இதனால் இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலாத்காரம் செய்ய முடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஜீவித்தை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது... இறுதியாக ஜீவித்தை தூக்கி கொள்ளிடம் ஆற்றில் போட்டுவிட்டனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் 14 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதில் விழுந்த ஜீவித், தண்ணீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டுவிட்டார்.
கும்பல்
ஆனால் உறவினர்களோ, "எங்க ஜீவித்துக்கு நல்லா நீச்சல் தெரியுமே.. இவங்கதான் கொலை பண்ணி ஆத்துல வீசிட்டாங்க" என்று குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் ஜீவித் விழுந்த இடம் சுழல் பகுதி என்பதால், அவரால் நீந்தி வராத சூழலும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே, ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக தீவிரமாக தேடினார்கள். அன்று முழுவதும் தேடியும் ஜீவித் கிடைக்கவில்லை.
ஜீவித்
அப்போது, "தனிமையில் ஜாலியாக இருந்த ஜோடியை போதையில் இருந்த நாங்கள் வீடியோ எடுத்தோம். அதை வைத்து மிரட்டி பணியவைத்து, அந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ய முயன்றோம். ஆனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜீவித் ஆற்றில் குதித்துவிட்டான்" என்று சொல்லி உள்ளனர்.
ரப்பர் படகு
ஆனால் உறவினர்ளோ, "எங்க ஜீவித்துக்கு நல்லா நீச்சல் தெரியுமே.. இவங்கதான் கொலை பண்ணி ஆத்துல வீசிட்டாங்க" என்று குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் ஜீவித் விழுந்த இடம் சூழல் பகுதி என்பதால், அவரால் நீந்தி வராத சூழலும் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே, ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக தீவிரமாக தேடினார்கள். அன்று முழுவதும் தேடியும் ஜீவித் கிடைக்கவில்லை.
முகத்தில் ரத்த காயங்கள்
அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால், திரும்பவும் 14 கிலோ மீட்டர் தூரம் வரை நேற்றும் தேடினார்கள். இந்நிலையில், திருச்சி பனையபுரத்தில் ஜீவித்தின் உடல் கரை ஒதுங்கியது. 2 நாட்கள் ஆனதால் ஜீவித்குமார் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. முகத்தில் ரத்தம் வழிந்து இருந்தது. கால்கள், கழுத்தில் காயங்கள் இருந்தன. இதை கண்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. தப்பி ஓடிய 3 பேரை தேடி வருவதுடன், தொடர் விசாரணையும் நடக்கிறது.